search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசுத்த திருக்குடும்பம்"

    அழகியபாண்டியபுரத்தை அடுத்த எட்டாமடை தூய திருக்குடும்ப தேவாலயத்தில் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
    அழகியபாண்டியபுரத்தை அடுத்த எட்டாமடை தூய திருக்குடும்ப தேவாலயத்தில் கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலையில் செபமாலை மற்றும் புகழ் மாலையும், இரவு கலை நிகழ்ச்சியும் நடந்தது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது கண்ணை கவரும் வகையில் வாணவேடிக்கை நடந்தது. மாலையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள், பங்கு தந்தையினர் செய்திருந்தனர்.
    நாகர்கோவில், மேலராமன்புதூரில் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில், மேலராமன்புதூரில் பரிசுத்த திருக்குடும்ப ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. விழாவில் ஓய்வு பெற்ற கோட்டார் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு கலை நிகழ்ச்சி நடக்கிறது.

    22-ந் தேதி மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் எம்மானுவேல் ராஜ் தலைமையில் திருப்பலியும், 23-ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலியும், தொடர்ந்து காலை 7.30 மணி முதல் மாலை 4 மணி வரை நற்கருணை ஆராதனையும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி போன்றவையும் நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, திருக்குடும்ப நவநாள், திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    வருகிற 29-ந் தேதி காலை 7 மணிக்கு, முதல்திருவிருந்து திருப்பலியும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை, மறையுரையும், இரவு 8.30 மணிக்கு தேர் பவனியும் நடைபெறுகிறது.

    30-ந் தேதி காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இதில் அருட்பணியாளர் ஹில்லாரியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 3.30 மணிக்கு தேர் பவனியும், 6.30 மணிக்கு தேர் திருப்பலியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் மார்க்கோனி ரவிச்சந்திரன் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் சகாய பிரபு மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள் செய்துள்ளனர். 
    ×